சிகிரியா ஓவியங்களை பாதுகாக்க இத்தாலியில் இருந்து விசேட பதார்தம்!!

750

sigriya

சிகிரியா ஓவியங்களை பாதுகாப்பதற்காக இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிக விலை கொண்ட இரசாயண பதார்த்தத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சீகிரிய ஓவியங்கள் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட இத்தாலிய ஓவிய பாதுகாப்பு நிபுணர்களால் இந்த இரசாயண பதார்த்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இரசாயண பதார்த்தத்தை பயன்படுத்துவதன் மூலம் ஓவியங்களில் காணப்படும் தெளிவற்ற தன்மை குறைத்து, அவற்றின் இயல்பு தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க முடியும் என தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரசாயண பொருளை அடுத்த வாரம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீகிரிய ஓவியத்தை பார்வையிடும் இடத்தை விரிவுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.