பட்டாசு கிடங்கில் தீ விபத்து : எட்டுப் பேர் பலி!!

545

fire

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

தீ விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டுப் பேரே இவ்வாறு பலியாகியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பட்டாசுக் கிடங்கில் இருந்து லொரியில் பட்டாசுகளை ஏற்றிய போது, ஊராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த எட்டுத் தொழிலாளிகள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழ்வர் உயிரிழந்ததாக செய்திகள் வௌியாகியுள்ளன.

மேலும் ஒரு தொழிலாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, 25 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். விபத்து நேரிட்ட பட்டாசு கிடங்குக்கு அருகே இருந்த ஸ்கேன் மையத்தில் இருந்தும் நோயாளிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.