பொய்யான செய்திகளை வெளியிடும் இணையங்கள் : வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு!!

242

img_1741

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதவான் தொடர்பாக பொய்யான செய்திகள் இணையதளங்களில் வெளியாகியதையடுத்து சட்டத்தரணிகள் இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி இன்றைய தினம் வவுனியாவிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பொய்யான செய்திகளை வெளியிடும் இணையதளங்களை தடை செய்யுமாறு கோரி இதற்கான தீர்வினை அரசாங்கம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த சகல வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.