வவுனியாவில் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!!

231

missing

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்து வரும் தேய்வேந்திரன் சிறி காந்தன் (வயது 29) என்பவர் கடந்த 18.10.2016 காணாமல் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஊறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா உக்குளாங்குளத்தில் கல்வி நிலையத்திற்கு மேலதிக வகுப்பிற்கு சென்றிருந்த தனது பிள்ளையை கூட்டிவரச் NP BDJ 2134 இலக்கமுடைய மோட்டார் வண்டியில் சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போனவர் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காணாமல் போனவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.