தமிழகத்தில் பள்ளி மாணவிகள் குழுவாக சேர்ந்து புகைப்பிடிக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் பள்ளி மாணவிகள் யாருக்கும் தெரியாமல் மாடியில் சிகரெட் பிடிக்கின்றனர். இந்நிகழ்வை உடனிருந்த மாணவி ஒருவர் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், மாணவி ஒருவர் புகைப்பிடித்து கொண்டிருக்கிறார். அது வீடியோவாக பதிவு செய்வதை கண்டவுடன் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
இரண்டு சம்பவமும் ஓரே இடத்திலே நடைபெற்றுள்ளது என தெரிகிறது. மாணவிகள் 9 அல்லது 10ம் வகுப்பு படிப்பவர்கள் போல் தெரிகின்றனர். வீடியோவில் அவர்கள் தமிழில் பேசுவது தெளிவாக கேட்கின்றது.
தற்போது வெளியாகியுள்ள குறித்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.