குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய் : பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

545

murder

தமிழகத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தறுத்து கொன்றுள்ள சம்பவம் ஒரு ஆண்டிற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியை சேர்ந்த 35 வயதான பெனிட்டா என்ற பெண்ணே இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மீனாட்சிசுந்திரம், பெனிட்டா தம்பதியினரின் இரண்டு குழந்தைகள் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

பெனிட்டா குளியல் அறையில் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக பெனிட்டா கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு பெனிட்டா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தனது பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.