இரவு உணவுடன் பொரியல் சமைத்து வைக்காமையினால் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்ட நபரொருவர், விடியும் வரை தனது மனைவியை ஜன்னலுடன் சேர்த்து கட்டி வைத்த சம்பவமொன்று ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கூலித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்நபர் தினமும் இரவில் வீடு திரும்பும் போது மதுபானம் அருந்தி வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வழமையை விட அதிகளவில் மதுபானம் அருந்திவந்த இந்நபர், சோறுடன் உண்பதற்கு பொரியல் எதையும் மனைவி சமைத்து வைத்திருக்காமையினால் வயர் ஒன்றில் தனது மனைவியின் இரண்டு கைகளையும் கட்டிவிட்டு அவரை ஜன்னலுடன் பிணைத்து கட்டிவைத்து விட்டு மதுபோதையில் தரையில் படுத்து உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது தனது மனைவி ஜன்னலில் கட்டப்பட்டிருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் பின்னர் உடனடியாக சென்று கட்டவிழ்த்து விட்டு மனைவியை அழைத்து வந்து கதிரையில் அமரச் செய்ததுடன் அவரிடம் மன்னிப்பும் கோரியிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவத்துக்கு பின்னர் இந்நபர் மதுபானம் அருந்திவரும் பழக்கத்தை விட்டிருந்ததாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக எவ்வித பொலிஸ் முறைப்பாடு செய்திருக்கவில்லை யென்றும் தெரிவித்துள்ளனர்.






