உணவில் பொரியல் இல்லை என்பதற்காக மனைவியை ஜன்னலுடன் இரவு முழுதும் கட்டிவைத்த கணவர்!!

470

fight

இரவு உண­வுடன் பொரியல் சமைத்து வைக்­கா­மை­யினால் மது­போ­தையில் வீட்­டுக்கு வந்து தனது மனை­வி­யுடன் சண்­டை­யிட்ட நப­ரொ­ருவர், விடியும் வரை தனது மனை­வியை ஜன்­ன­லுடன் சேர்த்து கட்டி வைத்த சம்­ப­வ­மொன்று ஹெம்­மாத்­த­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கூலித் தொழி­லில் ­ஈ­டு­பட்­டி­ருந்த இந்­நபர் தினமும் இரவில் வீடு திரும்பும் போது மது­பானம் அருந்தி வருவதை வழக்­க­மாக கொண்­டி­ருந்­துள்ளார்.

சம்­பவ தினத்­தன்று வழ­மையை விட அதி­க­ளவில் மது­பானம் அருந்­தி­வந்த இந்­நபர், சோறுடன் உண்பதற்கு பொரியல் எதையும் மனைவி சமைத்து வைத்­தி­ருக்­கா­மை­யினால் வயர் ஒன்றில் தனது மனை­வியின் இரண்டு கைக­ளையும் கட்­டி­விட்டு அவரை ஜன்­ன­லுடன் பிணைத்து கட்­டி­வைத்து விட்டு மது­போ­தையில் தரையில் படுத்து உறங்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மறுநாள் காலை கண்­வி­ழித்து பார்த்­த­போது தனது மனைவி ஜன்­னலில் கட்­டப்­பட்­டி­ருப்­ப­தனை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கவும் பின்னர் உட­ன­டி­யாக சென்று கட்­ட­வி­ழ்த்து விட்டு மனை­வியை அழைத்து வந்து கதி­ரையில் அமரச் செய்­த­துடன் அவ­ரிடம் மன்­னிப்பும் கோரி­யி­ருந்­த­தா­கவும் பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இச்­சம்­ப­வத்­துக்கு பின்னர் இந்­நபர் மது­பானம் அருந்­தி­வரும் பழக்­கத்தை விட்­டி­ருந்­த­தாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக எவ்வித பொலிஸ் முறைப்பாடு செய்திருக்கவில்லை யென்றும் தெரிவித்துள்ளனர்.