நான் முதல் முறை அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தபோது அது எனக்கு மறுக்கப்பட்டது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இதற்கான காரணத்தை நான் கேட்டபோது, பாபாஜி உங்களுக்கென்று சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லை. மேலும் உங்களுக்கு இன்னும் கல்யாணுமும் ஆகவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் இதற்கு வேறுகாரணம் தான் இருக்கமுடியும். அதுகுறித்து நான் வலியுறுத்திக் கேட்டும் கூட சொல்ல மறுத்து விட்டனர். எனக்கு விசா தரவே இல்லை.
ஆனால் பின்னர் ஐ. நா கூட்டம் ஒன்றில் நான் பேச அழைக்கப்பட்டேன். அப்போது அவர்களே கூப்பிட்டு நான் கேட்காமலேயே 10 வருட கால விசாவைக் கொடுத்தனர். உலக குடிமகன் துறவிகள், ஆன்மீகத் தலைவர்கள் சர்வதேச குடிமக்கள் ஆவர் என்று கூறியுள்ளார்.
4500 கோடி மதிப்பிலானது பதஞ்சலி குழுமத்தின் நிறுவனர் ராம்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.






