பிரதமர் மோடி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

552

22live-baby

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி இளைஞர் ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகில் உள்ள நயபுரா ஹன்சிபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாரத்சிங். இவரது மனைவி விபா சிங். இவர்களுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் விபா சிங் தனது குழந்தைக்கு பெயர் வைக்க கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென குழந்தையின் தந்தை பாரத் சிங்கிற்கு வந்த தொலைப்பேசி அழைப்பில் “main Narendra Modi bol raha hoon ” என ஒருவர் இந்தியில் பேசியுள்ளார்.

நான் மோடி பேசுகிறேன் என்றும் உங்கள் குழந்தைக்கு வைபவி என பெயர் வையுங்கள் எனவும் ஒருவர் அதில் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த விபா சிங்கால் இதை நம்பமுடியவில்லை. இதனால் பேசியது பிரதமர் மோடி தானா என பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் அவருக்கு மேலும் ஆச்சரியளிக்கும் விதமாக போனில் பேசியது பிரதமர் மோடி தான் என தெரியவந்தது.

மேலும், பிரதமர் போனில் பேசியதை பிரதமர் அலுவலகம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர். இப்போது அந்த இளைஞர் உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.