பொதுமக்களை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தால் 18 கோடி அபராதம்!!

640

Closeup of businessman making a phone call on landline telephone. Conceptual of customer service or telemarketing, toned retro or instagram effect.

 

பிரித்தானிய நாட்டில் வணிக ரீதியாக பொதுமக்களை அடிக்கடி செல்போனில் தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்கு 18 கோடி வரை அபாரதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டின் டிஜிட்டல் மற்றும் கலாச்சார துறை அமைச்சரான மேட் ஹான்காக் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரித்தானிய நாட்டில் மட்டும் பொதுமக்களுக்கு தேவையற்ற வணிக ரீதியான 40 சதவிகித அழைப்புகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 11 முதல் 20 தேவையற்ற அழைப்புகள் வருகின்றன.

இதனால் பொதுமக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு வணிக ரீதியான அழைப்புகளை மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

எனவே இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட்(18,03,02,031 இலங்கை ரூபாய்) அபாரதமாக விதிக்கும் புதிய சட்ட திருத்தம் வரவுள்ளது.

இதுமட்டுமில்லாமல், இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளை அனுமதிக்கும் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனிப்பட்ட முறையில் 5,00,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒரு நிறுவனத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இயக்குனர்கள் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5,00,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள இந்த புதிய சட்ட திருத்தம் அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.