எச்சரிக்கை : வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!!

1035

strong

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக, கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக வானிலை அவதான நிலையம்தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதன் காரணமாக இலங்கைக்கு நேரடி பாதிப்பு இருக்காது என்றும்நாட்டின் தென், மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணங்களில் 100தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழைபெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலைஅவதான நிலையம் அறிவித்துள்ளது.

கடற்படையினர் மற்றும் மீனவர் சமுதாயங்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலைஅவதான நிலையம் அறிவித்துள்ளது.