யாழில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சுலக்சன் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகன்!!

1304

capture

யாழ். கொக்குவில் குளப்பிட்டியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இறந்த பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் துப்பாக்கிக் சூடு பட்டு இறந்த போது, மற்றைய மாணவனும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், பொலிஸார் கீழே விழுந்த மாணவனை அருகில் இருந்த மதிலோடு தாக்கி கொன்றதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலை மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்ஸனின் நடிப்பில் உருவான குறுந்திரைப்படம்..

யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நாளை (24) பேரணி ஒன்றை நடாத்த அழைப்பு விடுத்துள்ளார்கள்.

மேலும், காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி கிளிநொச்சி அரச அதிபர் செயலகத்தை சென்றடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது சமூகம் இழந்தது மாணவர்களை மட்டும் அல்ல ஒரு சிறந்த கலைஞரையும் இந்த படுகொலை சம்பவங்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கப்பட வேண்டும்.