எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மரணம்!!

634

everest

உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜூன்கோ தாபெய் தனது 77 ஆவது வயதில் கடந்த(20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜப்பானில் பிறந்த இவர் தனது 10 வயதிலேயே மலையேறும் பயிற்சியில் ஈடுப்பட்டு 1975 ஆம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்.

எட்மன்ட் ஹிலரியும், டென்சிங் நோர்கேயும் உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு பின்னர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன்கோ தாபெய் எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.