கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் நண்பகல் வரை யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்..
யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நெடுஞ்சாலையை மறித்து பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் மாணவர்கள் மேற் கொண்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. மாணவர்கள் தமது கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.
இப் போராட்டத்தின் போது சீருடையணிந்த பொலிஸார் எவரும் கடமையில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.