யாழில் மாணவர்களின் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் நிறைவு.அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!(படங்கள்)

270

கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் நண்பகல் வரை யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்..

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நெடுஞ்சாலையை மறித்து பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் மாணவர்கள் மேற் கொண்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. மாணவர்கள் தமது கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.

இப் போராட்டத்தின் போது சீருடையணிந்த பொலிஸார் எவரும் கடமையில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

14364729_1777709768923278_2434171432895152077_n 14610929_1777710082256580_2338527089893797031_n 14642323_1777709982256590_2894688054319154253_n 14642484_1777709878923267_5031966665529798554_n 14650219_1777710385589883_1408491951820637320_n 14650450_1777718048922450_5094453219924193143_n 14657254_1777709778923277_8961289165776483822_n 14691069_1777709772256611_6762154123375492545_n 14702435_1777710285589893_3409212056650402890_n 14702464_1777717422255846_1238787679773606277_n 14718802_1777709905589931_2168982322204625811_n 14721635_1777710095589912_864183723354784012_n 14724546_1777710398923215_325160591695252451_n 14731377_1777710175589904_1454454287375641908_n