வவுனியா A9 வீதியில் இன்று (24.10.2016) மாலை 3.00 மணியளவில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வவுனியா A9 வீதி சோயா வீதிக்கு அருகாமையில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை
அதிக வேகமாக பயணித்தமையினால் வாகனம் சாரதியில் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.