வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் சமகால அரசியல் நிலவரங்களையும் எதிர்காலச் செயற்பாடுகளையும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடினர்.
அத்துடன் எதிர்வரும் காலத்திலும் இச்சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் வடபகுதியில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல், பௌத்த விகாரைகளை அமைப்பது, நில அபகரிப்பு, வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தெரிவு போன்றவை கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் கடந்த சில் தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கொடூரத்தாக்குதலில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.