வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.
அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற மக்களின் அன்றாடசேவைகள் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பேரூந்துகள் இன்றி பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். வெளியூர் சேவைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. பெருமளலான பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்த நிலையங்களும் முடப்பட்ட போதும் பத்திரிகை விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.