யாழ். மாணவர்கள் படுகொலையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்!!

252

 
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி இன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடுகடந்த அரசின் இளையோர் அமைச்சு இன்று முன்னெடுத்துள்ளது.

காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஒருமனதோடு அறப்போரில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 3