வவுனியா உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொ ன்று நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக வவுனியாவில் காணப்படும் குளத்தில் நீர் நிலைகள் வற்றியுள்ளது. இதன் காரணமாக நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொன்று வந்துள்ளது.
இம் முதலையினை கண்டு நாய்கள் குரைத்தமையினால் அயல்வீட்டாரின் உதவியுடனும் உக்குளாங்குளம் இளைஞர்களின் உதவியுடனும் முதலை பிடிக்கப்பட்டு தற்போது கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக 119 பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து தற்போது உக்குளாங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.