மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று மாலை 16வயது சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கறுவப்பங்கேணி, அம்புரோஸ் வீதியில் உள்ள வீட்டில் இருந்தே இந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டியை சேர்ந்தவர் எனவும் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை அடுத்தே குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.