இலங்கையை சேர்ந்த 114 வயதான மூதாட்டியொருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அரநாயக, கெவிலிபிட்டிய பிரதேசத்தில் பிறந்த அனுலாவத்தி மாவத்த என்ற பாட்டிக்கு தற்போது 114 வயதாகும். அவர் கேகாலையில் இடம்பெற்ற மூத்தவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு கின்னஸ் சாதனையொன்றை படைத்துள்ளார்.
அந்த விளையாட்டு போட்டியில் இரண்டு பிரிவுகளில் பாட்டி கலந்துக் கொண்டார். ஈட்டி எறிதல் மற்றும் குண்டு வீசுவதல் ஆகிய பிரிவுகளிலேயே குறித்த 114 வயது பாட்டி கொண்டார்.
அவர் கலந்துக் கொண்ட இரண்டு பிரிவுகளிலுமே தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவர் குண்டு வீசும் போட்டியில் கலந்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.