மரணத்தை ஏற்படுத்த பொலிசார் திட்டமிட்டிருக்கவில்லை : பொலிஸ் மா அதிபர்!!

366

poojitha

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மரணத்தை ஏற்படுத்துவதற்கு தமது உத்தியோகத்தர்கள் திட்டமிட்டிருக்கவில்லை எனவும், சம்பவத்தின் பின்னரான பாரதூரமான நிலையைக் கருத்திற்கொண்டு, தனது தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஊடகவியலாளர்கள் அனுராதபுரத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.