மும்பையில் 14 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்புகையில் 8 பேர் கொண்ட கும்பல் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நகரின் வெளிப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியை கட்டி வைத்து, இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியாதோடு மட்டுமின்றி மிரட்டியும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அச்சிறுமி நடந்த வற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், 7 பேரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதில் மூன்று பேர் சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.






