தமிழச்சிக்கு பிரான்ஸ் பொலிஸ் கடும் எச்சரிக்கை!!

658

tamilachi

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரப்பிய தமிழச்சியை பிரான்ஸ் பொலிசார் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்பவர் ‘முதல்வர் உயிரிழந்து விட்டதாக’ பேஸ்புக்கில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இத்தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து அடுத்தடுத்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரை தொடர்ந்து பிரான்ஸில் உள்ள தமிழச்சி மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம், தமிழகத்தை சேர்ந்த மத்திய நிர்வாகி ஒருவர் பிரான்ஸ் தூதரகம் மூலம் தமிழச்சி மீது புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரை தொடர்ந்து தமிழச்சி ஒரு தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்திய அரசியலை பற்றி இந்தியர்கள் தான் விமர்சனம் செய்ய வேண்டும். இதற்கு எதிராக வதந்தி பரப்பி வந்தால் தன்னை நாடு கடத்தி விடுவோம்’ என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழச்சி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பொலிசாரின் எச்சரிக்கைக்கு பின்னர், ‘இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியாவை பற்றி விமர்சனம் செய்கின்றனர். எனவே, அவர்களையும் நீங்கள் நாடு கடத்துவீர்களா?

தமிழச்சி இந்தியாவிற்கு சென்றால் பாதுகாப்பாக இருப்பார். ஆனால், ஈழத்தமிழர்கள் அங்கு சென்றால் அவர்களின் நிலை என்ன?’ என தமிழச்சி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளார்.