நாயை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்!!

550

dog

இந்தியாவில் இளைஞன் ஒருவன் பெண் நாயை பலாத்காரம் செய்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த குற்றத்திற்காக 22 வயதான அஸ்லம் கான் என்ற நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் ஜஹாங்கிர் கூறியதாவது, சம்பவத்தின் போது நாய் பயங்கரமாக குரைத்துக்கொண்டிருந்தது.

உடனே என் மகனை சென்று பார்க்க சொன்னேன். அப்போது, நாயுடன் ஒரு நபர் தவறாக நடந்துக்கொண்டிருந்ததை பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான்.

உடனே அந்த மர்ம நபர் தப்பி ஓடினான். ஆனால், பகுதி மக்கள் அவனை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர் என கூறியுள்ளார்.

பொலிசார் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவில் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்த செய்தி இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.