இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2800 பேர் உயிரிழப்பு!!

536

acci

இந்த வருடத்தின் கடந்த காலத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நாதாரணமாக வருடமொன்றுக்கு 2500 பேர் விபத்துக்களில் உயிரிழப்பதாகவும், அது இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இவ்வாறு விபத்துக்களில் காயமடைவோர் நீண்டகால அங்கவீன நிலைக்கு ஆளாவதாகவும், அதிகமாக 15 க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினரே விபத்துக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகம், பாதை விதிகளை மீறல், சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம், பாதைகளில் தொலைபேசி பாவனை, வாகனங்களின் நிலை போன்றன இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

இவ்வாறான நிலமைகளை கருத்திற்கொண்டு, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் சர்வதேச தினத்திற்கு சமாந்தரமாக விபத்துக்களை தடுப்பதற்கான தேசிய வாரத்தை அமுல்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.