வவுனியா பட்டானிச்சூரில் அமைந்துள்ள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று 26-10-2016 கல்லூரியின் அதிபர் எம்.எஸ் ரம்சீன் தலைமையில் வைர விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயதின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமான நடைபவனியானது கல்லூரியின் வாயிலில் ஆரம்பமாகி பாடசாலை சமூகத்தினருடன் பட்டானிச்சூர் கிராமத்தினூடாக மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது அதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் பாண்டு வாத்தியம் முழங்க நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்வில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா வலயகல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் பாடசாலை சமூகத்தினர் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.