பொதுமக்களுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இயங்குகின்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையிலான தரப்படுத்தலில் இலங்கைக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
140 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த ஆய்வில் இலங்கை ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மியன்மார் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மியான்மார் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இலங்கை எட்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இலங்கை மூன்று இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






