வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று 27.10.2016 சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி நிகழ்வு நெடுகேணி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் மற்றும் வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சமூக மேம்பாடு உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுங்கேணி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் சிறுவர் மற்றும் முதியவர்களுக்கான போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.