6 வயது சிறுமியின் உதவியுடன் நகை கடையில் கொள்ளை : CCTV காணொளி வெளியானது!!

308

capture

அக்குறனை நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று பகல் வேளையில் இரு குழந்தைகளுடன் வந்துள்ள இரு பெண்கள் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி மூலமாக மேற்படி ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க ஆபரணங்கள் திருடிய சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தங்க நகைக் கடைக்கு ஒரு கைக்குழந்தை மற்றும் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் வந்துள்ள மேற்படி இரு பெண்களும் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை அக்கடையில் இருந்து நகைகள் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்துள்ளனர்.

பின்னர் உரிய சந்தர்ப்பம் கிடைத்தவுடன் ஆறு வயது மதிக்கத்த சிறுமி மூலமாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைகள் அடங்கிய தட்டம் ஒன்றை திருடி உடன் வந்த பெண்ணிடம் கொடுப்பதும் அவர் அதனை மறைத்து வைப்பதும் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சிசிரிவி கெமராவின் பதிவாகியுள்ள வீடியோவின் காட்சிகளை உதவியாகக் கொண்டு சந்தேகத்திற்குரிய பெண்களை கைது செய்வதற்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இப் பெண்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 066 22 44 322 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக அறிவிக்குமாறு அலவத்துகொடை பொலீஸாருக்கு பொலிஸார் பொது மக்களின் உதவி நாடியுள்ளனர்.