பேஸ்புக் காதலனால் வாழ்க்கையை இழந்த பெண்!!

391

love

இந்தியாவில் இளைஞர் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் பழகிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புனே பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், தானே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் அழைப்பு கொடுத்துள்ளார்.

அதையும் அந்த பெண் ஏற்றுக் கொண்டு அவருடன் பேசி பழகியுள்ளார். நாளைடைவில் இது காதலாக மாறியுள்ளது.

இதனால் அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி புனேவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இவரை நம்பி வந்த அப்பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

இது குறித்து அந்த இளைஞரின் பெற்றேரிடம் சென்று இப்பெண் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களே எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.