வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே இன்று (28.10.2016) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி திடீரென வீதியில் மற்றைய பக்கத்திற்கு திரும்ப முற்ப்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்னால் சென்ற பட்டா ரக வாகனம் பாரிய விபத்தினை தடுக்கும் முகமாக அருகே காணப்பட்ட மதகில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் பட்டா வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.