சச்சின் ஓய்வு பெற மாட்டார் : ரவி சாஸ்திரி நம்பிக்கை!!

358

ravi-shastri-2

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார் என ரவிசாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், 200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்று விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சச்சின் கடந்த 2014ம் ஆண்டு லோட்ஸ் டெஸ்ட் போட்டி வரை விளையாடுவார் என்று முன்னாள் அணித் தலைவரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் சச்சின் எந்நேரத்திலும் ஓய்வு பெற மாட்டார் தொடர்ந்து விளையாடுவார்.

அடுத்த ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனது ஓய்வு குறித்து அவசரப்படவில்லை என சச்சின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.