ஊக்கமருந்து குற்றச்சாட்டு: கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!!

505

jeptoo-rita

ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடை 4 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியமை உறுதியாகியதை அடுத்து, அவருக்கு 2 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை நீதிமன்றம் அவருக்கு 4 வருட போட்டித்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 2014 ஆம் ஆண்டு அவருக்குக் கிடைக்கப்பெற்ற பொஸ்டன் மற்றும் சிக்காக்கோ மரதன் ஓட்டப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.