பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு கடூழிய சிறை!!

293

jail

பெண்ணெருவரை பாலியல் தொல்லை செய்து உடலுறவுக்கு அழைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 15.08.2016 அன்று பருத்திச்சேனை கன்னன் குடாவில் வசிக்கும் பெண் ஒருவரின் முறைப்பாட்டையடுத்தே மேற்படி நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது எதிரியின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.