பிரித்தானிய மகாராணியின் இல்லத்துக்குள் நுழைந்த திருடர்கள் பிடிபட்டனர்!!

319

buckingham-palace

பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள் கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார்.

அரண்மனையில் உள்ளே இருக்கும் அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அறையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும்.

இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை.

கடந்த 1982ம் ஆண்டு மைக்கல் பாகன் என்ற ஒரு நபர் ராணியின் படுக்கையரை வரை உள்ளே புகுந்து ராணியுடன் பேச முயன்றார். ராணியார் தனது காவலாளிகளை உஷார் படுத்தியவுடன் அவரும் கைது செய்யப்படார்.