2020இல் உலகின் வன ஜீவராசிகளில் 2 பங்கு அழிந்து விடும் அபாயம் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

504

alivu

2020ஆம் ஆண்டில் உலக அளவில் உள்ள வன ஜீவராசிகளில் 3இல் 2 பங்கு அழிந்து விட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு மையம் ஆய்வு ஒன்றை நடாத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 1970ஆம் ஆண்டில் இருந்து, 2012ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் வன ஜீவராசிகளின் எண்ணிக்கை 58% வரை அழிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மேலும் உச்சம் அடைந்து 2020ஆம் ஆண்டுக்குள் 67% வரை அழிவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்படி நடந்தால் இன்னும் நான்கே ஆண்டுகளில் உலகின் வன ஜீவராசிகளின் அளவில், 3இல் 2 மடங்கு அழிந்து விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, தொழிற்சாலை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், வன ஜீவராசிகளின் அழிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

வன உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டனை சேர்ந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.