இந்தியாவின் ஷீரடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷீரடியில் உள்ள அஹ்மத்நகரில் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று அவரது வீட்டிற்கு அருகிலிருந்து கடத்தப்பட்டார்.
அப்பெண்ணை கடத்திய 4 பேர் கொண்ட அந்த கும்பல் அவரை அப்பகுதில் உள்ள ஒரு வயலுக்கு கொண்டுசென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது.
32 வயதான அப்பெண்ணை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்துக்கொண்டிருந்த போது வயலில் அப்பெண் மயங்கிய நிலையில் உள்ளதாக சில கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற குடும்பத்தினர் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பிறகு தனது சகோதரியின் உதவியோடு நடந்தவற்றை குடும்பத்தினரிடம் அப்பெண் தெரியப்படுத்தினார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பொலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் தலைமறைவாகியுள்ள 4 பேரையும் பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.