தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.
இந்தத் தீபாவளி நன்னாளில் தமிழ் மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று, அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி,சமாதானம் ஆகியவை பெருகுவதற்கான சூழ்நிலை விரைவில் உருவாக வேண்டும் என்ற என்னுடைய அவாவினை தெரிவித்து எனதருமை தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.