போலிக் கடவுச்சீட்டில் நாடு திரும்ப முயற்சித்த இலங்கையர் இந்தியாவில் கைது!!

252

pp

போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தர முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர், இந்தியாவின் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரிடம் போலி ஆவணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்தியக் கடவச்சீட்டு இருந்துள்ளது.

மிஹின் லங்கா விமானத்தில் இலங்கைக்கு பயணிக்க முயற்சித்த போதே குடிவரவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இலங்கை தமிழ் பேசியதை அறிந்த சுங்கத்துறையினர் சந்தேகங்கொண்டு அவரிடம் விசாரித்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து இந்தியாவில் வாழ்வதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஸ்ரீதயா என்ற குறித்த இலங்கை பிரஜை 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்று அவரது சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.