வவுனியாவில் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு!!

252

powercut

உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) காலை 8 மணியளவிலிருந்து 6 மணிவரை யாழ் குடாநாட்டு பிரதேசங்கள் மற்றும் வவுனியாவின் சில பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

இதன் அடிப்படையில் யாழ் பிரதேசத்தில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், சோளாவத்தை, அராலி வீதியின் ஒருபகுதி, புங்குடுதீவு, வைத்தியசாலைவீதி, காரைநகர் சந்தி வீதியில் இருந்து கே.கே.எஸ்.வீதி துரையப்பாவிளையாட்டரங்கில் இருந்து சத்திரச்சந்தி வரை, சப்பல் வீதி வரையிலும்,

யாழ் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் குறுக்கு தெருக்கள், வேம்படி சந்தி, பிரதானவீதி, மாவடி, மூளாய், வட்டுக்கோட்டை அராலி, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மண்கும்பான் கடற்படை முகம், புங்குடுதீவு இலங்கை கடற்படை முகாம் போன்ற இடங்களிலும்,

யாழ்.சிறைச்சாலை, யாழ்.பொலிஸ் நிலையம், யாழ்.பொது நூலகம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் யாழ் நீதிமன்ற கட்டட தொகுதி, இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், வவுனியாவில் சில பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.