வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் பதற்றம் : ஒருவர் மீது வாள்வெட்டு!!

458

untitled-1

வவுனியா பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் அயல் கிராமம் ஒன்றிலிருந்து வந்த இளைஞர் குழுவினர் குளித்து விட்டு செல்லும் வழியில் கிராமத்திலுள்ள வீடொன்றில் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பின்பு தமது கிராமத்திற்கு சென்று மேலும் பலரை அழைத்து வந்து வாள் மற்றும் தடி பொல்லுகள் உட்பட இடியன் துப்பாக்கிகளையும் காட்டி கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.

பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரையிலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மீது வாள் வீச்சும் இடம்பெற்றுள்ளது.