வவுனியா பூந்தோட்டத்தில் இளைஞர் குழுக்களிடையே மோதல் : மூவர் படுகாயம் : பொலிஸார் குவிப்பு!!

435

 
வவுனியா மதீனாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இதையடுத்து உதவிக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது பூந்தோட்டம் பகுதியிலிருந்து சென்ற இளைஞர் குழுவினர் குறித்த முஸ்லீம் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அது கைகலப்பாக மாறியது. இதனால் காயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து பூந்தோட்டம், மதீனாநகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது, நேற்றைய தினம் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம் மதீனாநகர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 20,22,23 வயதுடைய தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியாவில் கற்குழி, பம்பைமடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் இளைஞர்களிடையே மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மோதல்களுக்கு காரணம் தீபாவளி தினமான நேற்று இளைஞர்கள் மது அருந்திவிட்டு குழுக்களாக தேவையற்ற தகராற்றில் ஈடுபட்டமையாகும்.

1 dsc_0724 dsc_0725 dsc_0726 dsc_0727 dsc_0728 dsc_0733 dsc_0734 dsc_0735 dsc_0736 dsc_0738 dsc_0739 dsc_0741 dsc_0742 dsc_0744 dsc_0746 dsc_0747 dsc_0748 dsc_0750