இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.
கடலோர பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் சிற்சில பகுதிகளி் மழை பெய்யலாம்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளைகளில் பனி மூட்டம் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடமாக பொத்துவில் வரையான் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






