கைதிகள் தப்பியோட்டம் : மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்!!

257

suspended

நீர்கொழும்பில் – தலுபொத சிறைச்சாலையில் 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று காலை ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட 6 கைதிகள் தலுபொத சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.