வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் நேற்று (29.10.2016) காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வுகளில் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் முழுமையான முயற்சியில் திருநாவற்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் பங்களிப்புடனும் இச் சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இம் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், கழகத்தின் ஆலோசகர் மு.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



























