89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்கு 85 நாடுகள் விண்ணப்பம் செய்துள்ளன. 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கு 85 நாடுகளிலிருந்து 85 படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஒஸ்கார் விருதுகளை வழங்கும் அக்கடமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ், ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைத் திரைப்படம் எதுவும் இப்பட்டியலில் இல்லை. இந்தியாவிலிருந்து வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் அன்ஜூம் ஷெஹ்ஸாத் இயக்கிய மெஹ் ஈ மீர்” படம் அனுப்பப்பட்டுள்ளது.
பங்களாதேஷிலிருந்து தௌகீர் அஹ்மத் இய்கிய ‘த அன்நேம்ட்’ படமும் நேபாளத்திலிருந்து மின் பஹதுர் பாம் இயக்கிய த பிளெக் திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவிலிருந்து மெஹ்மோத் சபா இயக்கிய ‘பரகத் மீட் பரகத்’ திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
ஈரானிலிருந்து அஸ்கர் பர்ஹாதி இயக்கிய ‘த சேல்ஸ்மேன்’ படமும் ஈராக்கிலிருந்து ‘ஹல்கவாத் முஸ்தா’ படமும் அனுப்பப்பட்டுள்ளன.
யேமனில் இருந்து கதீஜா அல் சலாமி இயக்கிய “ஐ ஏம் நோஜூம் ஏஜ் 10, டைவர்ஸ்ட்” படம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒஸ்கார் விருதுக்கு யேமன் திரைப்படமொன்று விண்ணப்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.