மீண்டும் யாழில் வாள்களின் அட்டகாசம் : இருவர் படுகாயம், பலர் கைது!!

483

vaalvettu

யாழ். மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் அளவெட்டி, நரிஜிட்டான் முகரி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சுன்னாகம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கத்திகளுடன் வந்த குழு நரிஜிட்டான் முகரி பகுதியில் இருந்த குழுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை பெரும்திரளான மக்கள் வேடிக்கை பார்த்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோதலின் காரணமாக இருவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் தெல்லிப்பளை பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றையும் மோதலுடன் தொடர்பு பட்ட சிலரையும் கைது செய்துள்ளதுடன் தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த மோதல் இடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது கார் ஒன்றும் முற்றாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. மோதலின் இறுதியிலேயே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழில் பல்வேறு விதமான அசம்பாவிதங்கள் அன்றாடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.