பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞன் விளக்கமறியலில்!!

211

facebook

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞனை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று (29) உத்தரவிட்டார்.

பேராறு-கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பேஸ்புக்கில் காதலித்து அப்பெண்ணிடம் திருமண வார்த்தைகள் கூறி ஏமாற்றி ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்துள்ளார்.

தொடர்புகள் ஏதும் இல்லாது இருந்த நிலையிலே, அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட, பெற்றோர்கள் மூலமாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் நேற்று(29) காலையில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.