கொழும்பில் இருந்து 11 விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவை!!

671

srilankan

கொழும்பில் இருந்து மேலும் 11 விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றான ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வலயங்களை மையப்படுத்தி இந்த விமான சேவைகள் செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தானின் லாஹூர், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பங்களாதேஷின் டாக்கா, ஓமானின் மஸ்கட், பஹ்ரைன், மாலைத்தீவு, சீசெல்ஸ், இந்தியாவிக் கொல்கத்தா, மதுரை, வாரணாசி மற்றும் புத்தகயா ஆகிய விமான நிலையங்களுக்கு இடையில் இந்த நேரடி விமான போக்குவரத்து முன்னெடுக்கப்பட உள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிவரங்கள் படி, கடந்த ஆண்டு இலங்கை வந்திருந்த 17 இலட்சத்து 98,380 சுற்றுலாப் பயணிகளில் 09 இலட்சத்து 23,338 பேர் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.